Chrome CSS Drop Down Menu
கதை கவிதை கட்டுரை குமரிச்செய்திகள்
Recently Updated

உடையார்விளையில்: பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் அதிகாரி மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி

February 14th, 2008 nanjiltamil Posted in Uncategorized, செய்திகள் | No Comments »

உடையார்விளையில் பொதுபாதையில் இடையூறாக இருந்த கோயிலுக்குச் சொந்தமான சுவரை இடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் சென்று சுற்றுசுவரை இடிக்க முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் அதிகாரிகளுக்கும் ஒரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. (பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் அதிகாரி மீது கார் ஏற்றி கொல்ல முயன்றார்கள்)

இந்த சம்பவம் குறித்து வக்கீல் ரசல்ராஜ், கோயில் நிர்வாகி அர்ஜுன் ஆகியோர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து வக்கீல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோரைக் கண்டித்து நேற்று கோர்ட்டைப் புறக்கணித்து கோர்ட் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் சிவதாணுபிள்ளை தலைமை வகித்தார். துணை தலைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் டென்னிசன், துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், பரமதாஸ், நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் 9-2-2008

Investigating Video
——————

AddThis Social Bookmark Button

அன்னப்பறவை

February 4th, 2008 iya_appa Posted in Uncategorized, கவிதை | No Comments »

அன்னப்பறவையாய் மாறிட
ஆசை தான்!
நீரை பிரித்தெடுத்து
பாலை மட்டும் பருகும்
அன்னப்பறவை போல!
எப்படி கலந்தது தண்ணீர்?
யார் கண்ணு பட்டது???
மாறாதிருப்போம் என்று
சொன்ன வாக்கு என்னாயிற்று???
மாறத வடுவாய் இன்று
நெஞ்சினிலே…
நீரை பிரித்தெடுக்க
முற்படுகையிலெல்லாம்
நானே முறிந்து போகிறேன்.

AddThis Social Bookmark Button

நீல பத்மநாபனுக்கு தமிழில் சாகித்ய அகாதெமி விருது

January 24th, 2008 nanjiltamil Posted in Uncategorized, செய்திகள் | No Comments »

நாகர்கோவிலைச் சேர்ந்த நீல பத்மநாபனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி இலக்கிய விருது கிடைத்துள்ளது. அவரது இலையுதிர் காலம் என்ற நாவலுக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

நீல பத்மநாபனது இரண்டு மிக முக்கியமான, அதிகமாகப் பேசப்பட்ட நாவல்கள் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்ற எழுத்தாளர்களையும் படைப்புகளையும் தேடிக்கொண்டிருந்த சமயம், ஏதோ காரணத்தால் இவருக்கு ஏற்கெனவே சாகித்ய அகாதெமி கிடைத்திருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் இதுவரையில் கிடைக்கவில்லை என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது! இவருடைய பள்ளிகொண்டபுரம் என்ற நாவலின் ஆங்கில வடிவத்தை Where The Lord Sleeps என்று பதிப்பித்துள்ளோம்.

Nagercoil Neela padmanaabhan

நீல பத்மநாபன் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் எழுதும் திறன் வாய்ந்தவர். இவரது சில சிறுகதைகளை விரைவில் மலையாளத்தில் வெளியிட உள்ளோம்.

நீல பத்மநாபனுக்கு வாழ்த்துகள்!

Source: Thanks to pkblogs.com

AddThis Social Bookmark Button

Rajinikanth in Sultan The Warrior new 2008 official trailer

January 14th, 2008 nanjiltamil Posted in Uncategorized, கவிதை, சினிமா | No Comments »

AddThis Social Bookmark Button

Thiruvithamcode church to be declared global pilgrim centre

December 13th, 2007 nanjiltamil Posted in Uncategorized, செய்திகள் | No Comments »

Thursday December 13 2007 09:08 IST

Express News Service

T’PURAM:
The historic St. Mary’s Orthodox Syrian Church, Thiruvithamcode, Thuckalay, in Kanyakumari district, will be declared an International Pilgrim Centre on December 16.

The Church, believed to be established by St Thomas in AD 63, stands tall as an archaeological monument.

Ancient frescoes and inscriptions on the walls of the Church will be an interesting spectacle for history enthusiasts. The Church committee has decided to conserve the Church as a monument along with opening it to the pilgrims.

Another interesting aspect of the Church is that only the Holy Cross has been placed on the walls of the Church for worship.

The absence of the images of Jesus Christ and his disciples indicate that the Church was constructed much before the litergy had been evolved.

Mentions about the Thiruvithamcode Church can be seen in the book written by Portugese missionary Duvathe Barbose in the 16th century and in the book of Carlose Kalf, the Dutch Governor in the 18th century.

The function to declare the Church as an International Pilgrim Centre will be held at 3.00 p.m. on Sunday on the Church premises.

Catholicos Baselios Didimos I will make the declaration. Opposition leader Oommen Chandy and Transport Minister Mathew T Thomas will participate in the function.

Source: newindpress.com

AddThis Social Bookmark Button

கன்னியாகுமரி ரப்பர் தொழிற்சாலைக்கு நிலம் ஆர்ஜிதம்

November 12th, 2007 nanjiltamil Posted in Uncategorized, செய்திகள் | No Comments »

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு நில ஆர்ஜிதம் பணிகள் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் முடிவடையும் என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.

சட்டம், நீதி மேம்பாட்டு சங்கம், காந்தி காமராஜர் ராஜீவ் தேசிய கூட்டமைப்பு, மத்திய அரசின் ரப்பர் வாரிய கழகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல் முலம் ரப்பர் பொருள் உற்பத்தி கருத்தரங்கு நாகர்கோவில் புன்னைநகரில் நடைபெற்றது. ரப்பர் வல்லுனர் அலேக்சாண்டர் வரவேற்றார்.

அமைச்சர் சுரேஷ் ராஜன் கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்னர் பேசியதாவது,

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, நெல், வாழை, ரப்பர் சாகுபடி நல்ல நிலையில் நடந்து வருகிறது. நாட்டில் முதல் தரமான ரப்பர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி இருந்தபோது உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, படித்த இளைஞர்கள் வேலையில்லாததால் மோதலில் ஈடுபடுகிறார்கள். அதை தவிர்க்க தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தது.

அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க திமுக அரசு முடிவு செய்தது. அதன்படி நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அதன்பின் வந்த அதிமுக அரசு நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா உள்பட அனைத்து திட்டங்களையும் கைவிட்டு விட்டது. தற்போது மீண்டும் திமுக அரசு அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

குமரி மாவட்டத்தில் செண்பகராமன் புதூரில் ரப்பர் தொழிற்சாலை தொடங்க 240 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 170 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதை சமப்படுத்தி மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. டிசம்பர் 15க்குள் அங்கு முதற்கட்ட பணிகள் முடிவடையும் என்றார்.

நன்றி: thatstamil.com

AddThis Social Bookmark Button

தீபாவளி

November 7th, 2007 iya_appa Posted in Uncategorized, கவிதை | No Comments »

வழக்கமான அலாரத்தின்
ஓசையுடனேயே விடிகிறது…
விடியாமல் கிடக்கும் மனதுள்ளே…
விரிந்து கிடக்கும் பாலைவனம் போல்…
இறுக்கமான முகத்துடனும்…
கனத்த இதயத்துடனும்…
அதே அலுவலகம்…
அதே பாலைவனம்…
அதே அரபிக்களின் முகம்…
பட்டாசு ஓசை இல்லாமல்
குழந்தைகளின் குதூகலம் இல்லாமல்
ரத்தம் வழியும் இதயத்துடனேயே
வழிந்தோடும் கண்ணீரை
புறங்கையால் துடைத்துக்
கொண்டே…
நாங்களும் தீபாவளி
கொண்டாடுகிறோம்…

என்றென்றும் அன்புடன்
ஐயப்பன்
சவுதி அரேபியா

AddThis Social Bookmark Button

பசலை நோய்

November 5th, 2007 iya_appa Posted in Uncategorized, கவிதை | No Comments »

உன்னை பிரிந்ததில் வருத்தமுண்டு
பிரிவதில் சுகமும் உண்டு!
உனக்கு தெரியுமா?
பிரிவு காதல் வளர்க்குமென்று!
இது பிரிவு வளர்த்த காதல்!!!

காலை எழுந்தது முதல்
துலக்கும் பேஸ்ட்டில் உன் முகம்!
குளிக்கும் நீரில் உன் முகம்!
உண்ணும் உணவில் உன் முகம்!
இரவு தூங்கும் போதும் உன்முகம்!
மூடிய என் இமைக்குள்
ஓராயிரம் கவிதைகள்,
வாசித்தது நீ!
எல்லாமுமாய் என்னுள்ளே நீ!
நீ மட்டுமே!

பிரிவு வளர்த்த காதல் இது
என் சகியே,
இது பிரிவு வளர்த்த காதல்!!!
புரிந்து கொள் என்னவளே
பசலை நோய் காதலனை(கணவனை)யும்
வாட்டும் என்று!

என்றென்றும் அன்புடன்,
ஐயப்பன்
சவுதி அரேபியா

AddThis Social Bookmark Button

வலி தாங்கும் வலிவு தா இறைவா!

November 5th, 2007 iya_appa Posted in Uncategorized, கவிதை | No Comments »

எங்களின் கண்ணீரின் கரிப்பு
அந்த அரபிகடலின் கரிப்பைவிட
அதிகமானது!

இழந்தது ஏராளம்…
மொட்டை மாடியில் மல்லாந்து
படுத்து நட்சத்திரங்களை எண்ணியது!
அம்மாவின் அன்பு!
அப்பாவின் அறிவுரை!
மனைவியின் அரவணைப்பு!
மகனின் பாசம்!
பதில் சொல்லமுடியாத
மகளின் கேள்விகள்!
பண்டிகை காலத்தில் புத்தாடை
உடுத்தி குடும்பத்துடன் குதூகலம்!
ஒற்றை துண்டுடுத்தி நண்பனுடன்
ஆற்றில் விறால் பாய்ச்சல்!
இன்னும் எத்தனை எத்தனையோ!

இழப்பதற்கு இன்னும் என்ன இருக்கிறது???
இங்கு அழாமல் தூங்கிய இரவுகள் அதிசயம்.
ஓ வென்று உறத்து அழக்கூட முடியவில்லை!

தாங்கிப்பிடிக்க கரமில்லை!
முகம் புதைத்து அழ மார்பில்லை!
நானிருக்கேண்டா… என்று சொல்ல
நண்பனில்லை!

தொலைபேசியில் குரல்
கேட்கும் போதெல்லாம்
இதயத்தை இரண்டாக
அறுத்துப் போடும் வலி.
மெளனமான அழுகையுடனேயே
தாங்கிக் கொள்கிறோம்!

பணத்திற்காக இங்கு வந்து வாழ்கிறோம்
நடைபிணமாய்.

இறைவனிடம் வேண்டுவது
ஒன்றே ஒன்றுதான்…
“ வலி தாங்கும் வலிவு தா! ”
இங்கே இருக்கும் வரை
மட்டுமாவது!!!

என்றென்றும் அன்புடன்
ஐயப்பன்
சவுதி அரேபியா

AddThis Social Bookmark Button

நட்பு

November 2nd, 2007 iya_appa Posted in Uncategorized, கவிதை | No Comments »

கல்லூரி நாட்களில்
காதலை பற்றியே பேசும்
நண்பர்கள் மத்தியில்
நாம் மட்டும் வேறுபட்டோம்.

நட்ட நடுநிசி வரை
ஆற்றங்கரை மணலிலே
பாலகுமாரனையும்
வைரமுத்துவையும்
எத்தனை முறை அலசியிருப்போம் !

வாரம் ஒரு சினிமா
மாதம் ஒரு சுற்றுலா
அருவி குளியல்
கூட்டாஞ்சோறு, பீர் என
கவலை இல்லாமல்
கழித்த காலம் தான் வருமோ?

காலச்சுழற்ச்சியில் தான் எத்தனை
மாற்றங்கள்.
மாறாதிருப்போம் என்று எடுத்த
உறுதிமொழி மட்டுமே நெஞ்சிலே
மாறாத வடுவாய்.,

தொலைந்தது நட்பு மட்டுமல்ல!!!
நாமும் தான்.

என்றென்றும் அன்புடன்,
ஐயப்பன்,
சவுதி அரேபியா

AddThis Social Bookmark Button