உடையார்விளையில் பொதுபாதையில் இடையூறாக இருந்த கோயிலுக்குச் சொந்தமான சுவரை இடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் சென்று சுற்றுசுவரை இடிக்க முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் அதிகாரிகளுக்கும் ஒரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. (பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் அதிகாரி மீது கார் ஏற்றி கொல்ல முயன்றார்கள்)
இந்த சம்பவம் குறித்து வக்கீல் ரசல்ராஜ், கோயில் நிர்வாகி அர்ஜுன் ஆகியோர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து வக்கீல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோரைக் கண்டித்து நேற்று கோர்ட்டைப் புறக்கணித்து கோர்ட் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் சிவதாணுபிள்ளை தலைமை வகித்தார். துணை தலைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் டென்னிசன், துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், பரமதாஸ், நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் 9-2-2008
Investigating Video
——————
